
கேரள மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த தற்கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவனந்தபுரம் மாவட்டத்தில், அட்டிங்கலில் உள்ள தனது வீட்டில் 15 வயதான சிறுவன் ஒருவர் அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதேபோல், அருகிலுள்ள மாரநல்லூரில், அதே வயதுடைய மாணவி ஒருவரும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவங்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கிடையே நடந்துள்ளதால், மாணவர்களின் மன அழுத்தம் காரணமாக நடந்ததா என்பதற்கான விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் கல்வி தொடர்பாக அதிக மன அழுத்தம் அனுபவிக்கின்றனரா என்பதையும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன