சர்வதேச யோகா தினம் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் உலக அளவில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவில் ஜூன் 19ஆம் தேதி யோகா நாளில் பல பொது இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் செய்வதற்கும் விழிப்புணர்வு மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த 127 வயதான யோகா குரு பத்மஸ்ரீ சுவாமி சிவானந்தா தாத்தா யோகா செய்து அசத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 127 வயதாகும் இவ்வாறு கழுத்தை அசைத்து யோகா செய்யும் காட்சி பலரையும் வியக்க வைத்துள்ளது. 127 வயதிலும் தினந்தோறும் யோகா செய்வதை இவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த வயதிலும் தனக்கான வேலைகளை தானே செய்து கொள்கின்றார். எண்ணெய் தவிர்த்த உணவுகளை மட்டுமே இவ்வாறு சாப்பிட்டு வருகின்றார். இதுபோன்ற கட்டுக்கோப்புடன் வாழ்வதுதான் அவரின் ஆயுள் நீட்சிக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.