விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிலுப்பனூர் கிராமத்தில் வீரமணி (26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவர் பழகி வந்த நிலையில் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதைக் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.