திண்டுக்கல் மாவட்டம் தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். கடந்த ஆண்டு லட்சுமணன் 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

நேற்று முன்தினம் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணனுக்கு 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 55 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.