கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் தௌபிக் உமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயது ஆகும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஒரு 15 வயது சிறுமி மீது இவருக்கு ஆசை வந்துள்ளது. அந்த சிறுமியை இவர் காதலித்த நிலையில் ஆசை வார்த்தைகளை கூறி தன் வலையில் வீழ்த்தினார். அந்த சிறுமி தான் சொல்வதை எல்லாம் கேட்கும் படி ஆட்டோ ஓட்டுனர் செய்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக ஆசை வார்த்தைகளை கூறி மயக்கினார்.

இதை பயன்படுத்தி பல முறை அந்த சிறுமியை அவர் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகவே கருக்கலைப்பும் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று ஆட்டோ ஓட்டுனர் மிரட்டியதால் சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் கருக்கலைப்பு செய்ததால் வீட்டில் சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டதால் பெற்றோர் விசாரித்துள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் கருக்கலைப்பு மாத்திரைகளின் பெயரை சொன்ன அவருடைய நண்பரையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.