திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அம்மாபட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (19), யுவராஜ் (22) ஆகிய இருவரும் 15 வயது பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருந்தது வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்த போது தன்னை இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். பிறகு பெற்றோர்கள் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஹரிகரன் மற்றும் யுவராஜ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.