தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில் இன்று இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தற்போது ஈரோடு, திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆலய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.