
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடந்த 18 வருட ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி எடுத்த மிக குறைந்த ரன்கள் இதுவாகும். அதோடு சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தபட்ச ரன்களை பதிவு செய்த இரண்டாவது அணி என்ற மோசமான சாதனையையும் சிஎஸ்கே படைத்துள்ளது.
அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூர் அணி 70 ரன்களில் ஆல் அவுட் ஆனது தான் இதுவரையில் மிகக் குறைந்த ரன்களாகும். இதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில் 10.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. அவர்கள் எளிதாக இலக்கை அடைந்து சென்னையை வீழ்த்தினர். மேலும் இதன் காரணமாக சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5-வது தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.