
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒருநாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் 23.3.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000 தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உரிய நோக்கம் கொண்டது.
தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு மக்களின் நலத்திட்டமும் தேவை உள்ள ஒருவர் கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளை சென்று சேர வேண்டும் என்று என்பதில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அதே போலவே கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளை கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமை தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,65,21,98,000/- அவர்களின் வங்கி கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டு உள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கி கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதல்முறை.

நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15 அரசு விடுமுறை நாள் என்பதால் இத்திட்டம் தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிர்க்கும் ஒரு நாள் முன்னதாகவே உரிமை தொகையினை அனுப்பி வைக்க தாய் உள்ளத்தோடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் ஒருவர் கூட விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கில் திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவியர் கண்டறியப்பட்ட, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5, 041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர், மகளிர் உரிமைத்தொகை பெற்றுக் கொண்டவர்களின் இறந்து போனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8, 883 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
நடப்பு அக்டோபர் மாதத்திற்கான 1,06,48,406 மகளிருக்கான ரூபாய் 1,06,48,406,000/- உரிமை தொகையானது ஒரு நாள் முன்னதாகவே அக்டோபர் 14 அன்றே அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினை கொண்டிடாத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சில திட்டங்கள் தொடங்கப்பட்டு சில காலத்திற்குப் பிறகு பலன் தர ஆரம்பிக்கும். ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது திட்டம் தொடங்கப்பட்ட நாள் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக குடும்பத்தலைவர் மீது சிறப்பான நல்ல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன என்பதே இத்திட்டத்தில் மாபெரும் வெற்றியாகும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது#CMMKSTALIN | #TNDIPR | #kalaignar_magalir_urimai_thittam | #KMUT | #TNEmpowersWomen |@CMOTamilnadu @mkstalin@Udhaystalin @mp_saminathan pic.twitter.com/uDlBt0cAXO
— TN DIPR (@TNDIPRNEWS) October 16, 2023
இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் மாதம்தோறும் உரிமை தொகையை சென்று சேர்வதோடு, தகுதியுள்ள ஒவ்வொருவரும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவதற்கான வாய்போடும் இத்திட்டம் செயல்படுத்துவது இதன் சிறப்பு என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.