
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுராஜன். அவரது மனைவி அன்பரசி(30). இவர்களுக்கு திருமணமாகி 7 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளனர். ஏசுராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அன்பரசி தனது வீட்டில் தீடிரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்பரசியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அன்பரசியின் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.