
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா ஜோதிகா தம்பதிகள். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் காக்க காக்க படம் வெளியாகி நேற்றோடு 20 ஆண்டுகளை கடந்த நிலையில் அந்த படம் குறித்து தன்னுடைய நினைவுகளை சூர்யா பகிர்ந்து இருக்கிறார். காக்க காக்க படம் வெளியாகி 20 வருடங்களை கடந்த நிலையில் சூரியா தன்னுடைய twitter பதிவில் என்னுடைய எல்லாவற்றையும் கொடுத்த படம் அன்பு செல்வன் எப்பொழுதும் என் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பார். காக்க காக்க படத்தின் இளம் கன்றுகளாக தொழில்நுட்ப கலைஞர்கள், இந்த படம் தொடர்பாக என்னிடம் முதலில் பேசி ஜோதிகா, என்னுடைய சக நடிகர் இயக்குனர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
A film that gave me my All! Anbuchelvan will always be close to my heart. Wishes to all the “ilamkandrus” of #KaakhaKaakha the technicians, #Jo who first spoke to me about the film & my co-actors, & @menongautham thank you… So many good memories…! @Jharrisjayaraj @RDRajasekar… pic.twitter.com/mZGcZbue5Z
— Suriya Sivakumar (@Suriya_offl) August 1, 2023