
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மல்லீஸ்வரி என்ற 27 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் நிலையில் அதற்காக அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார். இவர் கடந்த 4 வருடங்களாக ஜனா ரெடி என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இதன் காரணமாக ஜனா ரெட்டியின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அவருக்கு வேற ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இதனால் மல்லீஸ்வரி மிகுந்த மன வேதனையில் இருந்த நிலையில் தன் காதலன் தன்னை ஏமாற்றி விட்டதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இதனால் சம்பவ நாளில் அவர் தனக்குத்தானே விஷ ஊசி செலுத்திக்கொண்டார். அவர் உயிரிழந்த நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் ஜனா ரெட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.