
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ஒரு பஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு மதுரையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய 13 வயது மகளுடன் அங்குள்ள ஒரு குடியிருப்பில் தங்கி இருந்த நிலையில் திடீரென அவர்களுடைய மகள் காணாமல் போய்விட்டார். கடந்த சில நாட்களாக சிறுமியை காணாத நிலையில் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர்.
அப்போதுதான் அவர்கள் வீட்டின் அருகே இருந்த ராபர்ட் கிளைவ் என்ற 47 வயது நபரையும் காணவில்லை என்பது தெரியவந்தது. உடனடியாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் அவர் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.
அவருடன் தான் சிறுமியும் இருந்துள்ளார். உடனடியாக அங்கு சென்று போலீசார் சிறுமியை மீட்டநிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமிக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மேலும் ராபர்ட் கிளைவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.