
தண்ணீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த கிருஷ்ணா தர்ஷனா தம்பதியினர் சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வந்தனர். நேற்று கிருஷ்ணாவும் தட்சிணாவும் கட்டிட வேலையில் ஈடுபட்டனர். அப்போது தரைத்தளத்தில் அவர்களது ஐந்து வயது மகள் ஸ்ருதி விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் சிறிது நேரம் கழித்து குழந்தையை காணவில்லை. இதனால் ஸ்ருதி கடத்தப்பட்டதாக நினைத்து பெற்றோர் தேடி பார்த்தனர்.
அப்போதுதான் சரியாக மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கட்டிட உரிமையாளர் மற்றும் பணி ஒப்பந்ததாரர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.