
அசாம் மாநிலம் கவுகாத்தியில் மோரிகான் மாவட்ட சிறைசாலை அமைந்துள்ளது. இங்கு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 5 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் நல்லிரவு 1 மணி முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் தப்பி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறையில் ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த சிறைக்கு அங்கு 2 துணை ஜெயிலர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கைதிகள் தப்பி ஓடிய விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடிய கைதிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் 5 கைதிகளும் தங்களது சிறை கதவை உடைத்துக் கொண்டு போர்வைகள், பெட்ஷிட்டுக்கள் மற்றும் லுங்கிகளை கொண்டு சுமார் 20 அடி உயரம் கொண்ட சுற்று சுவற்றில் ஏறி தப்பி சென்றுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் அவர்களுடன் இருந்த மற்ற சிறை கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.