தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தென்மேற்கு பருவமழையும் தற்போது தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதால் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.