
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதி, குமரி கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் சூறாவளி காற்று இன்று முதல் மே 23ஆம் தேதி வரை மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.