உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பூர் மிதோனி முதன்மைப் பள்ளியில் ஹிமான்ஷி என்ற மாணவி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹிமான்ஷி பள்ளி முதல்வரால் தாக்கப்பட்டதால் ஒரு கண் பார்வையை இழந்துள்ளார் என கூறப்படுகிறது. மாணவியின் தாயார் ஜோதி காஷ்யப் பள்ளி முதல்வர் மீது கல்வித் துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த புகாரில் மாணவியின் தாயார் கூறியதாவது, “தனது மகள் பள்ளி முதல்வரால் தாக்கப்பட்டதால் ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். முதல்வர் கீதா காரல் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் மாணவிக்கு ஏற்கனவே கண் பார்வை பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஹீமான்சஷி, பெனஜீர் என்ற மாணவியுடன் பாடப்பணி செய்து கொண்டிருக்கும்போது தவறுதலாக பெனஜிர் ஹிமான்ஷியின் முகத்தில் முட்டியுள்ளார். இதனால் ஒரு கண் வீங்கி உள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பள்ளி முதல்வரிடம் மருத்துவ சான்றிதழ் கேட்டபோது அதனை வழங்கும் உரிமை என்னிடம் இல்லை என மறுத்துவிட்டார்”. இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து மொராதாபாத் அடிப்படை கல்வி அதிகாரி அஜித்குமார் விசாரணை தொடங்கியுள்ளதாகவும், கூடுதல் கல்வி அதிகாரி சிவம் குப்தா தலைமையில் தொடர் விசாரணை பள்ளியில் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.