திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக வட மாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவரை பிடித்து சோதனை செய்த காவல்துறையினர் அவரிடம் 4 கிலோ 500 கிராம் அளவில் கஞ்சா சாக்லேட் வடிவில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பீகார் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர் என்றும், அவர் பெயர் ரூபேஷ்குமார் மண்டல் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து திருப்பூரில் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், அடிக்கடி கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.