
இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக போற்றப்பட்டு வருகிறார். அறிமுகமான சில காலத்திலேயே இந்திய அணியின் துணை கேப்டனாக வளரும் அளவிற்கு செயல்பட்டுள்ளார். அதோடு இந்திய அணியின் அடுத்த கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார்.
முன்னதாக இவர், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டல்கரை காதலிப்பதாக வதந்திகள் வந்தன. மேலும் பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் காதலிப்பதாகவும் மற்றொரு வதந்தி கிளம்பியது. இந்நிலையில் அவை அனைத்துக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். என்னை வெவ்வேறு நபர்களுடன் தொடர்புபடுத்தி நிறைய வதந்திகள் வருகின்றது. அவை அனைத்தும் ஆபத்தானது. அது போன்ற நபரை நான் இன்னும் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. ஆனால் நான் அந்த குறிப்பிட்ட நபருடன் தொடர்பில் இருக்கிறேன்.
எனது தொழில் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனம் செலுத்துகிறேன். வருடத்தில் 300 நாட்கள் ஒருவருடன் இருக்க என் வாழ்க்கையில் இடமில்லை. எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கும் என்னால் ஒருவருடன் நேரத்தை முதலீடு செய்து தொடர்பில் இருக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியும் என்று கூறினார்.