திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கம்பளியம்பட்டி அருகே உள்ள பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் கம்பளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் பார்சல் வாங்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது செந்துறையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.