
தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று 12 மாவட்டங்களில் காலை 9.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.