
மதுரை பழங்காநத்தத்தில் திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தை அ.தி.மு.க பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க அமைச்சர்களிடம் பணம் பெற்று தான் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தினார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தி.மு.க செலவில் விசிக மாநாட்டை நடத்திய பெருமை திருமாவளவனை சேரும். மேலும் மாநாட்டிற்கான அனைத்து செலவுகளையும் அமைச்சர்கள் பங்கெடுக்க சொல்லி தி.மு.க போட்ட மைதானம், மேடை, நாற்காலிகள் என தி.மு.க செய்த செலவில் விசிக தோழர்களை உட்கார வைத்த பெருமை திருமாவளவனுக்கு சேரும். அதோடு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று பழமொழி திருமாவளவனுக்கே பொருந்தும். மேலும் தி.மு.க அரசுக்கு எதிராக எந்த தீர்மானமும் போட வேண்டாம் என்றும், மத்திய அரசுக்கு எதிராக எல்லா தீர்மானமும் போடுங்கள் என்றும் முதல்வர் முதலமைச்சர் கட்டாயப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.