
உத்திரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தின் சிவில் லைன்ஸ் பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற ஊர்வலத்தின் போது, பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் சிலர் தவறாக நடந்துகொண்டுள்ளனர்.
அதனைக் கடிதமாக்கி போலீசாரிடம் புகார் அளிக்க முயன்ற போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அந்த அதிகாரி அந்தப் பெண்ணைத் திட்டி, அவரது புகாரை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
यूपी में अंबेडकर शोभायात्रा के दौरान राह चलती एक युवती से छेड़छाड़ की घटना सामने आई है !!
अलीगढ़ के सिविल लाइन क्षेत्र में पीड़िता ने सिविल लाइन इंस्पेक्टर से शिकायत की, लेकिन कार्रवाई की बजाय इंस्पेक्टर खुद युवती को ही डांटते नजर आए !!
इस घटना का वीडियो सोशल मीडिया पर वायरल हो… pic.twitter.com/GFO86lamxx
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) April 14, 2025
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், காவல் ஆய்வாளர் அந்தப் பெண்ணைக் கத்துவதைக் காணலாம், அதே நேரத்தில் அவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் நபர்கள் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..
அதில் அவர் “அவன் என்ன பச்சையா? என்னை இடிச்சிட்டு போறான்…” என அந்த பெண் கோபமாகக் கூற, போலீசாரும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம், அலிகர் போலீசாரின் மீதான நம்பிக்கையை குறைக்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது அதிகாரிகள் இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.