சீனாவில் ஜென்ஜியாங் மாகாணத்தில் உள்ள பகுதியில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அபாவ்(30) என்ற நபர் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் அடிப்படையில் பெயின்ண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த வகையில் இவர் பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை தொடர்ந்து 103 நாட்கள் வேலை செய்துள்ளார். இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதற்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் ஜூன் 1-ம் தேதி அவர் கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பிற்கு அந்த நிறுவனம் தான் காரணம் என்று அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அபாவின் உயிரிழப்பிற்கு அந்த நிறுவனம் 20% காரணம் என்பதால் நீதிமன்றம் அவரது குடும்பத்திற்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 10,000 யென்கள் உட்பட மொத்தம் 4 லட்சம் யென்கள்(இந்திய மதிப்பிற்கு ரூ.47,000 லட்சம்) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டார்.