ஐரோப்பா நாடு தென்கிழக்கு ரோமானியாவில் கோல்டு என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் வாசற்படி சற்று உயரமாக இருப்பதால், அவரால் கால்களை மேலே வைத்து ஏறி வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. இதனால் அவர் அருகில் உள்ள ஓடைக்குச் சென்று அங்கிருந்த ஒரு கல் ஒன்றை எடுத்து வாசற்படியில் வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகு அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உறவினர் மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கிருக்கும் கல்லை உன்னிப்பாக கவனிக்கும்போது இது சாதாரண கல் போன்று இல்லையே என்று அவருக்கு தோன்றியுள்ளது. இதனால் அவர் அதன் சிறு பகுதியை மட்டும் வெட்டி ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். அப்போது அது சுமார் 38.5 முதல் 70 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய அம்பர் கல் என கண்டறியப்பட்டது. அதனுடைய எடை 3.5 கிலோ என்பதும் இந்திய மதிப்பில் 9.2 கோடி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதனை கைப்பற்றிய அதிகாரிகள் அருங்காட்சியை வைத்துள்ளனர். உலகிலேயே இதுதான் அதிக எடை கொண்ட அம்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.