திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் வடக்கு தெருவில் குட்டி துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவருக்கு மணி என்ற மனைவியும், ஜோசப் என்ற மகனும், அனிஷா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக குட்டி மூல நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த குட்டி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குட்டி துரையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.