
குஜராத் மாநிலம் போர் பந்தலில் இந்திய கடலோர காவல் படைத்து சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த ஹெலிகாப்டர் நெருங்கி விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த கடலோர காவல் படையை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போர் பந்தலில் வழக்கமான பயிற்சி நடைபெற்ற கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | Gujarat: Indian Coast Guard ALH Dhruv crashed in Porbandar, Gujarat during a routine training sortie.
(Visuals from Bhavsinhji Civil Hospital in Porbandar) https://t.co/XyM9Hatola pic.twitter.com/GjKLKWOKIn
— ANI (@ANI) January 5, 2025