தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

பட்ஜெட்டில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் 2500 ஏக்கர் நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிஅங்கு மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மேலும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு இது சரியான வழிமுறையாக இருக்கலாம் என்று விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.