சென்னை கிண்டி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் அங்கு படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 2 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த மாணவனை தாக்கி விட்டு அவர் கண் முன்னே காதலியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த மாணவன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வைத்து மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.