அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. குறிப்பாக எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட சில முன்னால் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் அமைந்துள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் நேற்று  அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னதாக சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதன் எதிரொலியாக தான் வைத்திலிங்கத்தின் அறையில் அமலாக்க துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வைத்திலிங்கத்தின் ட்டிலும் சோதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமான 6 இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக சோதனை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.