
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்கொடியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.