
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கூறியதாவது, இனிவரும் காலங்களில் பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு வழங்குவதற்காக உரிய கட்டண நிர்ணயம் செய்து அந்தந்த கட்சிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.