
தமிழகத்தில் சமீபத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இருந்து மாமல்லபுரத்தை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் சுங்க கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வாகனங்கள் செல்ல இரண்டு ரூபாய் இருந்து 110 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக மாதத்தின் முதல் நாளில் தான் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.