தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருமுறை இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆவார். இவர் கடந்த மாதம் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவருக்கு 75 வயது ஆகும்  நிலையில் அவருடைய உடல் நேற்று பொதுமக்கள் அதிகரிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வீட்டில் வைக்கப்படும் நிலையில் இதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் மின் மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதாவது அவருடைய பொது வாழ்வை போற்றும் விதத்தில் இன்று இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றியதால் அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.