தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது தொடர்பாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்கள் வழக்கு தொடர்ந்து நிலையில் நேரில் ஆஜராகாமல் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிமன்றத்தில் இருவரும் தாங்கள் பிரிவதில் உறுதியாக இருப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.