
தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் நாளை புயலாக மாற உள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு ரெட் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து நாளை ஒருநாள் மயிலாடுதுறை மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.