தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் நேற்று இரவு அங்கு ‌ வேலை பார்த்துக் கொண்டிருந்த முகமது யாஷிக் என்பவரை வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதே போன்று நேற்று இரவு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாஜக கட்சியின் பிரமுகரான செல்வகுமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அதன்பிறகு நேற்று ‌ இரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக இருக்கும் உஷாராணி என்பவரின் கணவர் ஜாக்சன் என்பவரும் 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் கைது பேர் கொண்ட மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் இதைத் தொடர்ந்து இன்று காலை கடலூரில் அதிமுக கட்சியின் வார்டு செயலாளராக இருக்கும் பத்மநாதன் என்பவரும் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இப்படி அடுத்தடுத்து படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.