
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நீலகிரி எஸ்.பி.யாக நிஷா மாற்றம். தூத்துக்குடி எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் மாற்றம் கோவை எஸ்.பி.யாக கார்த்திகேயன் மாற்றம். பெரம்பலூர் எஸ்.பி.யாக ஆதர்ஷ் பெசேரா மாற்றம். திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஷ்ரேயா குப்தா மாற்றம்.
சேலம் எஸ்.பி.யாக கவுதம் கோயல் மாற்றம் நாகை எஸ்.பி.யாக அருண் கபிலன் மாற்றம். கரூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான் மாற்றம் விருதுநகர் எஸ்.பி.யாக கண்ணன் மாற்றம். மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்டாலின் மாற்றம் திருவண்ணாமலை எஸ்.பி.யாக பிரபாகர் மாற்றம். தருமபுரி எஸ்.பி.யாக மகேஷ்வரன் மாற்றம் தென்காசி எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன் மாற்றம். வேலூர் எஸ்.பி.யாக மதிவாணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.