மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில் அந்த மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் போது கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்படி 72 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்சி பொறுப்புகளில் நீடிக்க முடியாது. இந்நிலையில் கே. பாலகிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 72 வயது ஆகிறது.

இதன் காரணமாகத்தான் அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழக சிபிஎம் கட்சிக்கு புதிய மாநில செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி மத்திய குழு உறுப்பினர் சண்முகம் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த கட்சியின் இளைஞர் அமைப்பு மற்றும் விவசாய சங்க மாநில செயலாளராக இருந்தவர். மேலும் இவர் கடந்த வருடம் தமிழக அரசின் அம்பேத்கர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.