
தமிழகத்தில் ஜூன் 23ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தேர்வானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நிர்வாக காரணங்களுக்காக, வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் நிலை பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வானது ரத்து செய்யப்படுகிறது என்றும், அடுத்த பதினைந்து நாட்களில் தேர்வு குறித்த அழைப்பு விடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே, தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.