மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை கடந்த 10 வருடங்களில் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதிதாக புற்றுநோய் சிகிச்சை மூலம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இதில் 2000 மையங்கள் நடப்பாண்டில் நிறுவப்படும் என்றும் ஆன்லைன் டெலிவரி உள்ளிட்ட ஒரு கோடி பகுதிநேர பயனாளர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த திட்டம் 2028 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தெரிவித்துள்ளார்.