நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து வருகின்ற ஜூன் 24ஆம் தேதி இளைஞர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை இல்லை என்று நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வலியுறுத்தியும் நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய குளறுபடி மற்றும் மோசடிகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.