தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுபெரும் இயற்கை விவசாயி பாப்பம்மாள். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தன் வாழ்நாள் முழுவதும் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வந்தார்.

இவருடைய காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இவருக்கு மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாப்பம்மாள் பாட்டிக்கு தற்போது 109 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் காலமானார். மேலும் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.