
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். அதன் விசாரணையின்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளனர்.