கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார்.

அப்போது வகுப்பறையின் கதவை பூட்டிவிட்டு வெளியே அமர வைத்து அந்த மாணவியை தேர்வு எழுத வைத்தனர். இதனை அந்த மாணவியின் தாய் செல்போனில் வீடியோவாக எடுத்த நிலையில் இணையதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் ஆனந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.