உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்பை மனதார வரவேற்கிறேன் என்றும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக மாநில மொழிகளை அறிவித்ததால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டின் பேச்சை ட்விட்டரில் பிரதமர் மோடி பகிர்ந்திருந்தார். அதை ரீட்வீட் செய்து முதலமைச்சர். மு க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.