சென்னை அமர்ந்த கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தாமதமாக மாஸ்க் அணிந்த படி வருகை தந்துள்ளார். கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து நேராக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அண்ணாமலை வந்துள்ளார். அவருக்கு பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்த உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் தன்னுடைய முடிவை தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை அறிவிக்க உள்ளார்.