
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் கடந்த ஒரு மாதமாக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன. இடைத்தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி இன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை போலவே மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் 276 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.