சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்க்கான கட்டண வசூலை நவீனமாக்கி சுங்கச்சாவடி முறைக்கு மாற்ற மாநகராட்சி முடிவு. நவீன சென்சார்கள் மூலம் எங்கெல்லாம் வாகனம் நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என்பதனை தெரிந்து கொள்ள முடியும்.

FASTag வழியாகவும் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள கட்டணமே தொடர வாய்ப்புள்ளதாகவும், பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரையிலும் இந்த திட்டம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.